;
Athirady Tamil News

நல்லாட்சி, ஏழைகள் நலன் குறித்து எங்களது குறிக்கோளை பூர்த்தி செய்ய உறுதி பூண்டுள்ளோம்- பிரதமர் மோடி..!!

0

பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி தமது நமோ செயலி மற்றும் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

கடந்த எட்டு ஆண்டுகள் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய பயன்பட்டது. சேவை, நல்லாட்சி மற்றும் ஏழைகளின் நலன் என்ற எங்களது குறிக்கோளை பூர்த்தி செய்ய நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

நமோ செயலியில் உள்ள முன்னேற்றப்பயணம் பற்றிய பிரிவு, உங்களை இந்த வளர்ச்சிப் பயணத்திற்கு அழைத்து செல்லும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

பிரதமர் நரேந்திர மோடி, தனது அதிகாரத்தை சேவை செய்யும் கருவியாக நினைத்து, ஏழைகள், விவசாயிகள், பிற்படுத்தப்பட்டோர், மற்றும் பெண்களுக்கு பல்வேறு உரிமைகளை வழங்கியுள்ளார்.

இது ஜனநாயகத்தின் மீதான அவர்களுடைய நம்பிக்கையை வலுப்படுத்தி
உள்ளது. அவர்கள் நாட்டின் வளர்ச்சிப் பாதையின் பங்கேற்பாளர்களாக மாறியுள்ளனர். பல வரலாற்று சாதனைகள் நிறைந்த எட்டு ஆண்டுகளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

கடந்த 8 ஆண்டுகளில், பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் கனவுகள், எதிர்பார்ப்புகளுக்கு மதிப்பளித்து நம்பிக்கையை விதைத்துள்ளார்.

நரேந்திர மோடி தனது திறமைான தலைமைத்துவத்தாலும், வலிமையாலும் நாட்டை பாதுகாப்பாக மாற்றியது மட்டுமின்றி, பல்வேறு முடிவுகளை எடுத்து நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இவ்வாறு அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.