;
Athirady Tamil News

சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இரவு முழுவதும் காத்திருப்பு போராட்டம்..!!

0

பாராளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, அக்னிபாத் திட்டம் ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இது குறித்து விவாதிக்க கோரியும் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி மக்களவை காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்பட 4 எம்.பி.க்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதேபோல் மாநிலங்களவையில் திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த 7 பேர், திமுகவைச் சேர்ந்த 6 பேர், தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) சார்பில் 3 பேர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் 2 பேர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 20 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பாராளுமன்ற வரலாற்றில ஒரே நேரத்தில் அதிக அளவிலான எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்படுவது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.
06
சஸ்பெண்ட் உத்தரவை கண்டித்து பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தியடிகள் சிலை முன்பு தரையில் அமர்ந்து நேற்று பகலில் இருந்து 50 மணி நேர காத்திருப்பு போராட்டத்தில் எம்.பி.க்கள். ஈடுபட்டனர். இரவு முழுவதும் அவர்களது போராட்டம் தொடர்ந்தது. இந்த போராட்டத்தில் நான்கு காங்கிரஸ் எம்.பி.க்களும் இணைந்தனர். இதனிடையே, தேசியவாத காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்களும் இந்த போராட்டத்தில் இணைய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விலைவாசி உயர்வு ஜிஎஸ்டி வரி ஆகியவை பொதுமக்களை பாதிப்பதாகவும், எம்.பி.க்கள் மேற்கொண்டுள்ள அமைதியான சத்தியாகிரகம் வெற்றி பெறும், என திரிணாமுல் மாநிலங்களவை எம்.பி. டெரெக் ஓ பிரையன் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.