;
Athirady Tamil News

மூவர்ண கோடுகளுடன் கூடிய வெள்ளை நிற தலைப்பாகை அணிந்த பிரதமர் மோடி..!!

0

பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடர்ந்து 9-வது முறையாக டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அவர் 2014-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு முறையும் வித்தியாசமான தலைப்பாகை அணிந்து தேசிய கொடி ஏற்றி இருந்தார். இதே போல இன்றும் மோடியின் தலைப்பாகை வித்தியாசமாக இருந்தது. மூவர்ண கோடுகளுடன் கூடிய வெள்ளை நிற தலைப்பாகை அணிந்து தேசிய கொடியை ஏற்றினார். மோடி நீல நிற கோட் மற்றும் கறுப்பு நிற ஷுவுடன் பாரம்பரிய குர்தா அணிந்து இருந்தார். நாடு சுதந்திரம் அடைந்து 75-வது ஆண்டை நிறைவு செய்யும் வகையில் 3 நாட்களாக வீடுகளில் தேசிய கொடியை ஏற்றுவதை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக மோடி மூவர்ண கோடுகளுடன் கூடிய தலைப்பாகையை அணிந்து இருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.