;
Athirady Tamil News

பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் நாளை மின் தடை – மின்சார வாரியம் அறிவிப்பு..!!

0

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் ரத்துசெய்யப்படும்.

தாம்பரம்: ராதாநகர் பாரதிபுரம், நெமிலிச்சேரி நெடுஞ்சாலை, பாரத்மாதா தெரு, அண்ணாமலை தெரு, ரவி தெரு, காமராஜர் தெரு டி.என்.எஸ்.சி.பி. வரதபுரம் மெயின் ரோடு, நேசமணி நகர், செட்டிநாடு வில்லா மாடம்பாக்கம் வேளச்சேரி மெயின் ரோடு, பழனியப்பன் நகர், வேம்புலியம்மன் கோவில் தெரு.

போரூர்: ருக்மணி நகர், முத்தமிழ் நகர், எஸ்.பி.அவென்யூ, நண்பர்கள் நகர், சுமித்ரா நகர், வைத்தி நகர், ராயல் சிட்டி.
ஐ.டி.காரிடர்: பெருங்குடி திருமலை நகர் 1-வது , 2-வது மற்றும் 3-வது தெரு.

பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததும் மின்வினியோகம் மீண்டும் கொடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.