;
Athirady Tamil News

டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி..!!

0

தலைநகர் டெல்லியில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் இந்தியாவில் இதுவரை குரங்கம்மையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் முதன்முதலாக கேரள மாநிலத்தில் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டது. வெளிநாட்டில் இருந்து கேரளா வந்த நபருக்கு குரங்கம்மை பாதிப்பு இருந்தது தெரியவந்தது. டெல்லியில் கடந்த ஜூலை 24-ம் தேதி முதல் குரங்கம்மை பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.