;
Athirady Tamil News

ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டம் – மம்தா பானர்ஜி டிசம்பர் 5ம் தேதி டெல்லி பயணம்..!!

0

இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 20 வளரும் மற்றும் வளர்ந்த நாடுகள் அடங்கிய ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மற்றும் ஆலோசனைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இந்நிலையில், அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ம் தேதி மாநில முதல் மந்திரிகள் கூட்டத்தை பிரதமர் மோடி நடத்துகிறார். இதில் பங்கேற்பதை மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக, மம்தா பானர்ஜி கூறுகையில், பிரதமர் மோடியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க 5-ம் தேதி டெல்லி செல்கிறேன். மேற்கு வங்காள முதல் மந்திரியாக அல்லாமல், திரிணாமுல் காங்கிரஸ் தலைவராக பங்கேற்பேன் என தெரிவித்தார். இந்தக் கூட்டத்துக்கு இடையே பிரதமர் மோடியை அவர் சந்தித்துப் பேசுவார் என மாநில அரசு வட்டாரங்கள் ஏற்கனவே தெரிவித்து

You might also like

Leave A Reply

Your email address will not be published.