;
Athirady Tamil News

தினசரி பாதிப்பு 2-வது நாளாக உயர்வு: புதிதாக 197 பேருக்கு கொரோனா!!

0

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 121 ஆக இருந்தது. நேற்று 171 ஆக உயர்ந்தது. இந்நிலையில் பாதிப்பு 2-வது நாளாக இன்றும் அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 197 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. நாட்டின் மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 80 ஆயிரத்து 583 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 229 பேர் நலம்பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 47 ஆயிரத்து 551 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 2,309 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 33 குறைவு ஆகும். தொற்று பாதிப்பால் புதிதாக உயிரிழப்புகள் எதுவும் இல்லை. கேரளாவில் விடுபட்ட பலி 1 கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 5,30,723 ஆக உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.