;
Athirady Tamil News

இரட்டைக் கொலைக் குற்றவாளி சிறையில் மரணம் !!

0

இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர், தும்பர சிறைச்சாலையின் வைத்தியசாலை வளாகத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பல்லேகல பொலிஸார் தெரிவித்தனர்.

கல்கமுவ பிரதேசத்தைச் ​சேர்ந்த 49 வயதுடைய சந்தேக நபரே நேற்று (04) தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேகநபர், 2022 ஆம் ஆண்டு தனது உறவினர்கள் இருவரைக் கொலை செய்த ​குற்றத்துக்காக பல்லேகல -தும்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் பல்லேகல பொலிஸாரும் சிறைச்சாலை திணைக்களமும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.