;
Athirady Tamil News

தாயான வேளை பெண்ணுக்கு அடித்த இரட்டிப்பு அதிஷ்டம் – மகிழ்ச்சி வெள்ளத்தில் அவர் !!

0

தான் தாயாகப்போவதாக மருத்துவர்கள் தெரிவித்த சந்தோஷமான செய்தி அடங்குவதற்கு முதலே அந்த இளம் தாய்க்கு லொட்டரியில் பரிசு கிடைத்த தகவலும் கிடைத்து இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

அமெரிக்காவின் மேரிலாந்தில் இந்த இரட்டிப்பு மகிழ்ச்சி செய்தி வந்துள்ளது.

தன்னை துரதிர்ஷ்டவசமாக நம்பிய இந்த இளம் பெண் இப்போது லக்கி மம்மா (அதிர்ஷ்டசாலி தாய்) என்று வர்ணிக்கப்படுகிறார். தனது சுய விவரங்களை இந்த இளம்பெண் வெளியிட விரும்பவில்லை.

லொட்டரியில் கூட அதிர்ஷ்டசாலி அம்மா என்றே எழுதப்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கு 50,000 அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்பட்டது. இலங்கை பணமதிப்பின்படி, 1 கோடியே 84 லட்சம் ரூபாயாக்கு அதிக தொகை என தெரிவிக்கப்படுகிறது.

இதனால், தனது தனிப்பட்ட தகவல்களை வெளியிட வேண்டாம் என இளம்பெண் முடிவு செய்துள்ளார். ஒரே நாளில் இரண்டு பரிசுகள் கிடைத்ததாக அந்தப் பெண் கூறுகிறார். அது உண்மையிலேயே அற்புதமான நாள். தனக்கு லொட்டரி அடித்ததை, நம்ப முடியவில்லை என்று அந்த பெண் கூறியுள்ளார்.

இந்த பணத்தை ஒரு சிறந்த விடுமுறைக்கு செல்ல முடிவு செய்துள்ளதாக கூறினார். மீண்டும் தாயாகப் போகிறேன் என்று தெரிந்த நாளில் லொட்டரி அடித்ததை மறக்க முடியாது என்று அவர் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.