;
Athirady Tamil News

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் சார்ள்ஸின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார்!

0

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் இராஜினாமாவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதிக்கு எழுத்துமூலம் முன்னர் அறிவித்திருந்தார்.

இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க சார்லஸிடம் இன்று (பெப் 07) தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.