;
Athirady Tamil News

மோட்டார் சைக்கிள்கள் திருட்டு!!

0

கடந்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ்ப்பாணம்,சுன்னாகம், அச்சுவேலி, கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நான்கிற்கும் மேற்பட்ட நூதனமான மோட்டார் சைக்கிள் திருட்டுக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

24 மணி நேரத்தில் அடுத்தடுத்து யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டுக்கள் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சிசிடிவி கமரா உதவியுடன் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.