;
Athirady Tamil News

மத்திய கிழக்கு பதற்ற நிலையால் இலங்கையின் பொருளாதாரத்துக்கு என்ன நடக்கும்?

0

ரொபட் அன்டனி

இலங்­கையின் பொரு­ளா­தாரம் தற்­போ­தைய நிலையில் குறிப்­பி­டத்­தக்க ஸ்திரத்­தன்­மை­யுடன் பய­ணிப்­பதை அவ­தா­னிக்க முடி­கி­றது. இலங்கை மத்­திய வங்கி வெளி­யிட்­டுள்ள ஏப்ரல் மாதத்­துக்­கான வெளி­நாட்டு வர்த்­தகக் குறி­காட்­டிகள் வர்த்­தகம் ஒரு நிலை­யான சூழலில் சென்று கொண்­டி­ருப்­பதைக் காட்­டு­கின்­றன. மேலும் இலங்கை வந்­த நாணய நிதி­யத்தின் முதல் பிரதி முகா­மைத்­துவ பணிப்­பாளர் கீதா கோபி­நாத்தும் இலங்­கையின் மீள் வருகை உலக நாடு­க­ளுக்கு சிறந்த முன்­னு­தா­ரணம் என்று குறிப்­பிட்­டுள்ளார்.

இருப்­பினும் சவால்கள் இன்னும் நீடிக்­கின்­றன. குறிப்­பாக, மத்­திய கிழக்கில் தற்­போது நிலவும் போர் மற்றும் பதற்ற நிலைமை இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்தில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும் என நிபு­ணர்கள் சுட்­டிக்­கா­ட­்டி­யுள்­ளனர். இந்தப் பதற்ற நிலை­மை­யினால் எழும் சவால்­களை சரி­யான முறையில் முகா­மைத்­துவம் செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் அர­சாங்­கத்தால் எடுக்­கப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

மத்­திய கிழக்கில் ஏற்­பட்­டுள்ள பதற்ற நிலை­மை­யினால், மசகு எண்­ணெயின் விலை அதி­க­ரித்­துள்­ளது. இது இலங்­கையின் வர்த்­த­கத்திலும் பொரு­ளா­தா­ரத்­திலும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும். ஏனெனில், ஒரு நாட்டின் அனைத்து பொரு­ளா­தாரச் செயற்­பா­டு­களும் மசகு எண்­ணெயின் விலை­யி­லேயே தங்­கி­யுள்­ளன. இன்­றைய உலகப் பொரு­ளா­தா­ரத்தில், மசகு எண்ணெய் விநி­யோ­கத்தில் மத்­திய கிழக்கு நாடுகள் முக்­கிய பங்கு வகிக்­கின்­றன. எனவே, அங்கு ஏற்­படும் போர் நிலைமை மற்றும் பதற்­றங்கள் எண்ணெய் வர்த்­த­கத்தில் பெரும் பாதிப்பை ஏற்­ப­டுத்தும். இது இலங்கை போன்ற நாடு­க­ளுக்கு நெருக்­க­டியைக் கொடுக்கும்.

அது­மட்­டு­மன்றி எண்ணெய் விநி­யோ­கத்தில் தாம­தங்கள், விநி­யோகச் செலவு அதி­க­ரிப்பு மற்றும் விநி­யோக ஸ்தம்­பிதம் போன்ற நெருக்­க­டிகள் ஏற்­ப­டலாம். எண்ணெய் விலை அதி­க­ரிக்­கும்­போது, இலங்கை போன்ற அபி­வி­ருத்­தி­ய­டைந்து வரும் நாடு­களின் பொரு­ளா­தா­ரத்தில் பாரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும். உதா­ர­ண­மாக, எண்ணெய் விலை அதி­க­ரிக்­கும்­போது, உற்­பத்திச் செலவு அதி­க­ரிப்­பதால் பொருட்­களின் விலைகள் அதி­க­ரிக்கும், போக்­கு­வ­ரத்துக் கட்­ட­ணங்கள் உயரும், மின்­சாரக் கட்­ட­ணங்கள் உயர்­வ­டையும். இது பண­வீக்­கத்­துக்கு வழி­வ­குத்து, மக்­களின் வாழ்க்கைத் தரத்தைப் பாதிக்கும். எனவே, இவ்­வா­றான சூழ்­நி­லைக்கு இலங்கை சரி­யாகத் திட்­ட­மிட்டு முகங்­கொ­டுக்க வேண்­டி­யுள்­ளது. மேலும் தற்­போது மத்­திய கிழக்கில் ஏற்­பட்­டுள்ள பதற்­ற­மா­னது இலங்­கையின் டொலர் உள்­வ­ரு­கை­யிலும் தாக்­கத்தை செலுத்தும். காரணம் இஸ்­ரேலில் இலங்­கை­யர்கள் பணி­பு­ரி­கின்­றனர். அதே­போன்று ஈரானில் அதி­க­ளவானோர் பணி­பு­ரி­யா­விட்­டாலும் கூட அதனை சுற்­றி­யுள்ள மத்­திய கிழக்கு நாடு­களில் அதி­க­ளவு இலங்­கை­யர்கள் பணி­பு­ரி­கின்­றனர். எனவே இங்கு பதற்றம் அதி­க­ரிக்கும் பட்­சத்தில் மத்­திய கிழக்கில் பணி­பு­ரி­கின்ற இலங்­கை­யர்­களின் செயற்­பா­டு­க­ளிலும் தாக்கம் அதி­க­ரிக்கும். அது இலங்­கைக்கு அனுப்­பப்­ப­டு­கின்ற அந்­நிய செலா­வ­ணியில் சிக்­கலைக் கொண்­டு­வரும். தற்­போது வருடம் ஒன்­றுக்கு ஆறு பில்­லி­ய­னுக்கும் அதி­க­ள­வான டொலர்கள் மத்­திய கிழக்கில் பணி­பு­ரி­கின்ற இலங்­கை­யர்­க­ளினால் அனுப்­பப்­ப­டு­கின்­றன. மத்­திய கிழக்கில் ஏற்­படும் பதற்றம் மத்­திய கிழக்கில் பணி­பு­ரி­கின்ற இலங்­கையர் மத்­தியில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும். 90களில் இடம்­பெற்ற மத்­திய கிழக்கு பிரச்­சி­னையின் போது இவ்­வா­றான சிக்கல் ஏற்­பட்­டது. அதனால் இந்த நிலை­மை­க­ளுக்கு முகம்கொடுக்கக் கூடிய வகையில் இலங்கை தன்னை தயார்­ப­டுத்திக் கொள்ள வேண்டும்.

இது இவ்­வா­றி­ருக்க தற்­போ­தைய நிலை­வ­ரப்­படி, இலங்­கையின் பொரு­ளா­தாரக் குறி­காட்­டிகள் ஒரு ஸ்திர­மான நிலையை நோக்கிப் பய­ணிப்­பதைக் காட்­டு­கின்­றன. இலங்கை வளர்ச்சிப் பாதையில் உள்­ளது என்­பதை சில தர­வுகள் உறு­திப்­ப­டுத்­து­கின்­றன:

ஏப்ரல் 2025இல் இலங்­கையின் வெளி­நாட்டு வர்த்­தக நிலை­வ­ரத்தை அவ­தா­னிக்கும் போது, ஏற்­று­ம­திக்கும் இறக்­கு­ம­திக்கும் இடை­யி­லான வித்­தி­யாசம் 717 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­க­ளாக எதிர்­ம­றை­யாகக் காணப்­ப­டு­கி­றது. அதா­வது, ஏப்­ரலில் இலங்கை 968 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­க­ளுக்கு ஏற்­று­மதி செய்­தி­ருக்­கின்­றது. அதே மாதத்தில், இலங்கை 1,686 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­க­ளுக்கு இறக்­கு­மதி செய்­தி­ருக்­கி­றது. எப்­போதும் இலங்­கையில் ஏற்­று­மதி வரு­மா­னத்தை விட இறக்­கு­மதி செலவே அதி­க­ரித்து காணப்­படும் நிலையில், இம்­மு­றையும் அதே நிலைமை காணப்­ப­டு­கி­றது.

சுற்­று­லாத்­துறை ஊடான வரு­மா­னமும் அதி­க­ரித்­துள்­ளது. ஏப்ரல் 2025 இல் 174,608 சுற்­றுலாப் பய­ணிகள் இலங்­கைக்கு வருகை தந்­தி­ருக்­கின்­றனர். இது ஏப்ரல் 2024 இல் பதி­வான 148,000 சுற்­றுலாப் பய­ணி­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் குறிப்­பி­டத்­தக்க அதி­க­ரிப்­பாகும். ஏப்ரல் மாதத்தில் சுற்­று­லாத்­துறை மூலம் 257 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் வரு­மானம் ஈட்­டப்­பட்­டுள்­ளது.

வெளி­நா­டு­களில் பணி­பு­ரியும் இலங்­கை­யர்கள் அனுப்பும் அந்­நிய செலா­வ­ணியின் அளவும் அதி­க­ரித்­துள்­ளது. ஏப்ரல் மாதத்தில் 646 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் அந்­நிய செலா­வ­ணி­யாக இலங்­கைக்குக் கிடைத்­துள்­ளன. இந்த இரண்டு துறை­களின் வரு­மா­னமும் ஏற்­று­ம­தி-­ இ­றக்­கு­ம­திக்கு இடை­யி­லான வர்த்­தகப் பற்­றாக்­கு­றையை ஈடு­செய்ய உத­வு­கி­றது.

எனினும் ரூபாவின் பெறு­ம­தியில் ஒரு வீழ்ச்சி அவ­தா­னிக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் ஒரு அமெ­ரிக்க டொல­ருக்கு நிக­ரான ரூபாவின் மதிப்பு 292 ரூபா­வாகக் காணப்­பட்­டது. ஆனால் தற்­போது, ஒரு அமெ­ரிக்க டொல­ருக்கு நிக­ரான ரூபாவின் மதிப்பு 299 ரூபா­வாகக் காணப்­ப­டு­கி­றது. இது சுமார் 2.3 சதவீத வீழ்ச்­சி­யாகும்.

இலங்­கையின் வெளி­நாட்டு கையி­ருப்பு 6.3 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­க­ளாக பதி­வா­கி­யுள்­ளது. இதில் சீன மக்கள் வங்­கி­யுடன் மேற்­கொள்­ளப்­பட்ட 1.5 பில்­லியன் அமெ­ரிக்க டொலர் பெறு­ம­தி­யான பரஸ்­பர பரி­மாற்றல் வச­தியும் அடங்கும். இருப்­பினும், வருட ஆரம்­பத்தில் காணப்­பட்ட வெளி­நாட்டு கையி­ருப்­புடன் ஒப்­பி­டு­கையில் குறிப்­பி­டத்­தக்க வீழ்ச்சி அவ­தா­னிக்­கப்­ப­டு­கி­றது.

ஏப்ரல் 2025இல் இறக்­கு­மதி செல­வுகள் அதி­க­ரிப்­ப­தற்­கான ஒரு காரணம், தற்­போது வாகன இறக்­கு­மதி நடை­மு­றையில் இருப்­ப­துதான். வாகன இறக்­கு­ம­திக்கு அதிக அளவில் டொலர்கள் வெளியே செல்­வதால், இறக்­கு­மதிச் செலவு அதி­க­ரித்­துள்­ளது.

இலங்­கையின் பொரு­ளா­தாரம் குறிப்­பி­டத்­தக்க வகையில் பய­ணித்துக் கொண்­டி­ருந்­தாலும், மிக வேக­மான வளர்ச்சி வீதம் ஒன்று தற்­போது இலங்­கைக்குத் தேவைப்­ப­டு­கி­றது. தற்­போது இலங்கை வெளி­நாட்டு கடன்­களை மீளச் செலுத்­து­வ­தில்லை. இந்தக் கடன் தவ­ணைகள் செலுத்­தப்­ப­டா­மை­யினால், மாதாந்தம் கிடைக்கும் டொலர்கள் மற்றும் வெளி­யேறும் டொலர்­களைக் கொண்டு நிலை­மையை சமா­ளிக்­கக்­கூ­டி­ய­தாக உள்­ளது. சுற்­று­லாத்­துறை வரு­மானம் மற்றும் வெளி­நா­டு­களில் பணி­பு­ரியும் இலங்­கை­யர்கள் அனுப்பும் வரு­மானம் போன்­ற­வற்­றினால் தற்­போ­தைய நிலை­மையை சமா­ளிக்க முடி­கி­றது.

ஆனால், 2027 ஆம் ஆண்­டி­லி­ருந்து இலங்கை வருடம் ஒன்­றுக்கு கிட்­டத்­தட்ட 4 அல்­லது 5 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களைக் கட­னாகச் செலுத்த வேண்­டி­யி­ருக்கும். இது ஒரு மிகப்­பெ­ரிய நெருக்­க­டி­யாக மாறும். தற்­போ­தைய சூழலில், வருடம் ஒன்­றுக்கு ஏற்­று­மதி வரு­மா­ன­மாக 12 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. ஆனால், இறக்­கு­மதி செலவு 22 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­க­ளாக உயர்­வ­டையும் போது, 10 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் வித்­தி­யாசம் இருக்கும்.

சுற்­று­லாத்­துறை மூலம் 4 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களும், வெளி­நா­டு­களில் பணி­பு­ரியும் இல­ங்­கை­யர்கள் அனுப்பும் அந்­நிய செலா­வணி மூலம் 6 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களும் இலங்­கைக்குக் கிடைக்கும். இவை இரண்டும் சேர்ந்து சுமார் 10 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை ஈட்­டு­வதால் ஏற்­று­ம­தி-­ , இ­றக்­கு­மதி செலவு இடை­வெ­ளியை நிரப்ப முடியும். இங்கு பொரு­ளா­தார வளர்ச்­சியை அதி­க­ரித்­துக்­கொள்­வது அவ­சி­ய­மாகும்.

மக்கள் அதிக அளவில் பொரு­ளா­தாரச் செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­வது அவ­சியம். அப்­போ­துதான் ஏற்­று­மதி அதி­க­ரிக்கும். ஏற்­று­மதி உற்­பத்­தி­களில் இலங்கை அதி­க­ளவில் ஈடு­பட வேண்டும். ஏற்­று­மதி வரு­மானம் அதி­க­ரிக்­கப்­பட வேண்டும். சுற்­றுலாப் பய­ணி­களின் வருகை அதி­க­ரிக்க வேண்டும். வெளி­நா­டு­களில் பணி­பு­ரியும் இலங்­கை­யர்கள் சட்­ட­ரீ­தி­யாக டொலர்­களை அனுப்ப வேண்டும். சேவை ஏற்­று­ம­தியை இலங்கை அதி­க­ரித்துக் கொள்­வதும் அவ­சி­ய­மா­கின்­றது.இவற்றின் மூல­மா­கவே இலங்கை தனது டொலர் உள்­வ­ரு­கையை அதி­க­ரித்துக் கொள்ள முடியும். அப்­போ­துதான் 2027 ஆம் ஆண்­டி­லி­ருந்து இலங்கை கடன்­களை மீளச் செலுத்த முடி­யு­மான சூழல் ஏற்­படும்.

எந்தக் காரணம் கொண்டும் மத்­திய வங்­கியில் கையி­ருப்பில் காணப்­படும் டொலர்­களைக் கொண்டு கடன்­களைச் செலுத்த முடி­யாது. 2022ஆம் ஆண்டு இந்தத் தவறு விடப்­பட்­டது. அந்த நிதி­யா­னது எப்­போதும் ஒரு மூன்று மாதத்துக்­கான அவ­சரத் தேவை­களைச் சமா­ளிப்­ப­தற்­காகப் பயன்­ப­டுத்­தப்­பட வேண்டும். எனவே, வெளி­நாட்டுக் கையி­ருப்பைக் கொண்டு வெளி­நாட்டுக் கடன்­களை மீளச் செலுத்த முடி­யாது. அந்தத் தவறை மீண்டும் செய்­யக்­கூ­டாது. எனவே, பொரு­ளா­தார வளர்ச்சி அதி­க­ரிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டி­யி­ருக்­கி­றது.

இந்தச் சூழ­லி­லேயே மத்­திய கிழக்கில் ஏற்­பட்­டி­ருக்கும் பதற்ற நிலை நாட்டின் பொரு­ளா­தா­ரத்தில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும் என்­பது பொரு­ளா­தார நிபு­ணர்­களின் கருத்­தாக அமைந்­தி­ருக்­கி­றது. நிச்­ச­ய­மாக மத்­திய கிழக்கில் ஏற்­பட்­டி­ருக்கும் இந்தப் பதற்ற நிலையைச் சரி­யான முறையில் இலங்கை ஆராய்ந்து, அதனை எதிர்­கொள்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.

திடீ­ரென எரி­பொ­ருட்­களின் விலைகள் பாரி­ய­ளவில் அதி­க­ரிக்­கும்­பட்­சத்தில், அதனை இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் பொரு­ளா­தா­ரங்­களால் தாங்கிக் கொள்ள முடி­யாது. அது­மட்­டு­மன்றி, வான் போக்­கு­வ­ரத்து மற்றும் கடல் போக்­கு­வ­ரத்தில் சிக்­கல்கள், விநி­யோகச் சங்கிலி தாமதம் போன்ற பல நெருக்கடிகள் தோன்றும். இவை அனைத்தையும் சரியான முறையில் திட்டமிட்டு இலங்கை முகாமைத்துவம் செய்ய வேண்டியிருக்கிறது.

இவற்றில் சரியான முறையில் விடயங்களை இனங்கண்டு, அவற்றை திட்டமிட்டு, உரிய வகையில் அந்தப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து பதிலளிக்க வேண்டும். அப்போதுதான் நெருக்கடியைச் சமாளித்து மேலே வர முடியும். எனவே, மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் விளைவாக அரசாங்கம் எவ்வாறு அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கப்போகிறது என்ப தில்தான் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியும், பொருளாதார நிலைமைகளும் தங்கியுள்ளன.

இலங்கைக்கு வந்துள்ள நாணய நிதியத்தின் பிரதிநிதி கீதா கோபிநாத்தும் உலகின் தற்போதைய நிச்சயமற்ற நிலை தொடர்பாக சுட்டிக்காட்டியிருக்கிறார். மேலும் இலங்கை சரியான முறையில் தனது ஆற்றலைப் பயன்படுத்தி சீர்திருத் தங்களை மேற்கொள்ளும் போது நாணய நிதியத்தை தொடர்ந்து நம்பியிருக்க வேண்டிய சூழல் ஏற்படாது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அதற்கேற்ற வகையில் இலங்கை பயணிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.