;
Athirady Tamil News

அடுத்த மாதம் பாகிஸ்தான் பாதுகாப்பு மந்திரி இந்தியா வருகிறார்?!!

0

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சீனா, இந்தியா, ரஷியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிரிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன. இந்த அமைப்பின் தற்போதைய தலைவராக இந்தியா உள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உள்ள நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு அடுத்த மாதம் (ஏப்ரல்) டெல்லியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும்படி பாகிஸ்தான் நாட்டு பாதுகாப்பு மந்திரி கவாஜா ஆசிப்புக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

இந்த நிலையில் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் மந்திரி கவாஜா ஆசிப் இந்தியாவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் நடைபெறும் கூட்டத்தில் ஆசிப் பங்கேற்பது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் இந்தியாவுடன் நட்புறவை விரும்புவதாகவும், இதனால் மந்திரி ஆசிப் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.