;
Athirady Tamil News

பண்ணை சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சிலையை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ்!!

0

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்ட நயினாதீவு நாகபூசணி அம்மனின் சிலையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார்.

பண்ணை பகுதியில் இன்று சனிக்கிழமை (15) மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று விட்டே குறித்த சிலையை அமைச்சர் பார்வையிட்டார்.

நாகபூசணி அம்மனின் சிலை வியாழக்கிழமை இரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், அம்மனின் சிலைக்கு மறுநாள் வெள்ளிக்கிழமை உருத்திரசேனை அமைப்பால் அபிஷேகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ஒவ்வொருவருடைய மத உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கப்பட வேண்டும் என்றும் அது ஏனைய மதங்களை பாதிக்காத வகையில் அமைய வேண்டும் என்றார்.

அண்மைக்காலமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தீடீர் தீடிரென சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுவது அதிகரித்து வருகின்ற நிலையில் அமைச்சர் குறித்த சிலையை பார்வையிட்டது பேசு பொருளாகியுள்ளது.

அம்மனின் சிலைக்கு உருத்திரசேனை அமைப்பால் அபிஷேகம்!! (PHOTOS)

You might also like

Leave A Reply

Your email address will not be published.