;
Athirady Tamil News

தொடர்ந்து 6-வது நாளாக சரிவு: கொரோனா தினசரி பாதிப்பு 3,325 ஆக குறைந்தது!!

0

இந்தியாவில் புதிதாக 3,325 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 26-ந்தேதி பாதிப்பு 9,629 ஆக இருந்தது. அதன் பிறகு தொடர்ந்து 6-வது நாளாக இன்றும் பாதிப்பு சரிந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 52 ஆயிரத்து 996 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 6,379 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 43 லட்சத்து 77 ஆயிரத்து 257 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 44,175 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொற்று பாதிப்பால் நேற்று 10 பேர், கேரளாவில் விடுபட்ட 7 மரணங்கள் என மேலும் 17 பேர் இறந்துள்ளனர். இதுவரை தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 564 ஆக உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.