;
Athirady Tamil News

வலுக்கும் உக்ரைன் ரஸ்யப்போர் – ஒரே நாளில் கொல்லப்பட்ட ரஸ்யாவின் மிக முக்கிய தளபதிகள் !!

0

கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக இடம்பெறும் உக்ரைன் ரஸ்யப்போர் நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டு செல்கிறது.

இந்த நிலையில் பக்முத் நகரில் நடைபெற்ற போரில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு ரஷ்ய தளபதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்வரிசையில் போரிட்டு வந்த இராணுவ மற்றும் அரசியல் பணிக்கான துணை இராணுவ கார்ப்ஸ் தளபதி கர்னல் யெவ்ஜெனி ப்ரோவ்கோ கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் 4 வது மோட்டார் பொருத்தப்பட்ட துப்பாக்கி படையின் தளபதி கர்னல் வியாசெஸ்லாவ் மகரோவ் போர்க்களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டபோது கொல்லப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.