;
Athirady Tamil News

சபரிமலை பொன்னம்பலமேட்டில் அனுமதியின்றி பூஜை செய்தது தொடர்பாக ஐகோர்ட்டு விசாரணை!!

0

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்ற சென்னையை சேர்ந்த நாராயணன் நம்பூதிரி தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் அங்குள்ள பொன்னம்பலமேட்டில் அத்துமீறி நுழைந்து பூஜை செய்தனர். இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்திலும் பதிவிட்டனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய திருவிதாங்கூர் தேவசம்போர்டு, பொன்னம்பலமேட்டில் அத்துமீறி நுழைந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி போலீசில் புகார் செய்தனர். போலீசார் இந்த சம்பவத்திற்கு துணை போனதாக வனத்துறை ஊழியர்கள் உள்பட 3 பேரை கைது செய்தனர்.

இந்த நிலையில் கேரள ஐகோர்ட்டு இந்த பிரச்சினையை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டது. நேற்று இந்த வழக்கின் விசாரணை நடந்தது. பின்னர் இதுதொடர்பாக அரசு மற்றும் தேவசம்போர்ட்டு நிர்வாகத்திடம் உரிய விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.