;
Athirady Tamil News

ஜனாதிபதி, பிரதமர் மோடியுடன் கம்போடியா மன்னர் சந்திப்பு!!

0

கம்போடியா மன்னர் நாரோடம் சிஹாமோனி 3 நாட்கள் பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார். கம்போடியா மன்னர் ஒருவர், இந்தியா வருவது கடந்த 60 ஆண்டுகளில் இதுவே முதல்முறை. கடந்த 1963-ம் ஆண்டு, தற்போதைய மன்னரின் தந்தையான மன்னர் நாரோடம் சிஹானோக் இந்தியா வந்தார். ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைப்பின்பேரில், மன்னர் நாரோடம் சிஹாமோனி வருகிறார். அவர் 30-ம் தேதி இந்தியாவில் தனது அலுவல்களை தொடங்குகிறார். இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு பாரம்பரிய அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அவர் ராஜ்காட் சென்று மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி ஆகியோருடன் கம்போடிய மன்னர் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்தார். ஜனாதிபதி மாளிகையில் கம்போடிய மன்னருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருந்து அளித்தார். மன்னருடன் அரண்மனை மந்திரி, செனட் துணைத்தலைவர், வெளியுறவுத்துறை மந்திரி உள்ளிட்ட உயர்மட்டக் குழுவும் வந்துள்ளது. இந்தியா, கம்போடியா இடையிலான தூதரக உறவு 70 ஆண்டுகளை எட்டி இருப்பதால் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.