;
Athirady Tamil News

மல்யுத்த வீரர்கள் போராட்டம் விவகாரம்- மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் விளக்கம்!!

0

மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:- விளையாட்டு மற்றும் ஆர்வமுள்ள மல்யுத்த வீரர்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது.

நாங்கள் அனைவரும் விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவாக இருக்கிறோம். டெல்லி காவல்துறை விசாரணை முடிக்கும் வரை காத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.