;
Athirady Tamil News

எலக்ட்ரானிக் தொட்டிலில் ஆடிய குழந்தை!!

0

சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கும் தொழிலதிபர்களின் ஆர்.பி.ஜி. சேர்மன் ஹர்ஸ் கோயங்காவும் ஒருவர். அவரது டுவிட்டர் பதிவுகள் அடிக்கடி வைரலாகும். அவர் பதிவிட்ட ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில், எலக்ட்ரானிக் தொட்டிலில் குழந்தை ஒன்று ஆடிக்கொண்டிருப்பதை காண முடிகிறது. தொட்டிலின் அருகில் மனிதர்கள் யாரும் இல்லை. குழந்தையை தூங்க வைக்க அல்லது அமைதியாக இருக்க அந்த எலக்ட்ரானிக் தொட்டில் தானாக அசைகிறது. இந்த வீடியோவை பகிர்ந்த கோயங்கா, தாயின் அன்புடன் இதனை ஒப்பிடமுடியுமா? சில சமயங்களில் தொழில்நுட்பத்தை உணர்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ 1 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. அதே நேரத்தில் இணையத்தில் விவாதத்தையும் தூண்டி உள்ளது. ஒரு குழந்தையை வளர்க்கும் போது மனித தொடுதல் (குறிப்பாக தாயின்) மிகவும் முக்கியமானது என்று நான் உணர்கிறேன் என ஒரு பயனர் கூறி உள்ளார். ஆனால் மற்றொரு பயனர், நான் இந்த தொட்டிலை விரும்புகிறேன். தாய்மார்கள் சோர்வடைவதை தடுக்க இரவில் இதை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என கூறி உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.