;
Athirady Tamil News

வெட்டுக்காயங்களுடன் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!!

0

மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி, ஓலைத்தொடுவாய் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இன்று (26) மதியம் குடும்பஸ்தர் ஒருவர் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான அப்துல் ரசாக் முஹமது ஹவ்ஸ் (வயது-51) என தெரிய வருகின்றது.

குறித்த சம்பவம் இன்று (26) காலை 11 .30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலத்தில் பலத்த வெட்டுக் காயங்கள் காணப்படுகின்றது.

இதேவேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிய வருகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.