;
Athirady Tamil News

வவுனியா மாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மறுசீரமைக்கப்பட்ட சம்பளக் கொடுப்பனவு வங்கியில் வைப்பு!!

0

வவுனியா மாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மறுசீரமைக்கப்பட்ட சம்பளம் மற்றும் அரசாங்கத்தின் மேலதிக கொடுப்பனவு என்பன வங்கியில் வைப்பு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் வவுனியா தெற்கு வலயம் மற்றும் வவுனியா வடக்கு வலயம் என்பன துரிதமாக ஆசிரியர்களின் சம்பள மறுசீரமைப்பு வேலைகளை மேற்கொண்டு அவர்களுக்கான மறுசீரமைக்கப்பட்ட சம்பள அதிகரிப்புக்களையும், அரசாங்கத்தால் இடைக்கால கொடுப்பனவாக வழங்கப்பட்ட 5 ஆயிரம் ரூபாய் பணத்தையும் இணைத்து ஆசிரியர்களின் சம்பள வங்கிக் கணக்கில் வைப்பு செய்துள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஆசிரியர்களின் இம் மாதத்திற்கான சம்பளம் கடந்த 20 ஆம் திகதி வைப்பு செய்யப்பட்ட நிலையில் விசேட பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டு இன்று (24.01) இவ் அதிகரித்த கொடுப்பனவுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

You might also like

Leave A Reply

Your email address will not be published.