;
Refresh

This website www.athirady.com/tamil-news/news/1669620.html is currently offline. Cloudflare's Always Online™ shows a snapshot of this web page from the Internet Archive's Wayback Machine. To check for the live version, click Refresh.

Athirady Tamil News

யாழில் பெண் ஒருவரால் முகமூடி கொள்ளையர்கள் தலை தெறிக்க ஓட்டம்!

0

யாழ்ப்பாணம் வலி வடக்கு தெல்லிப்பழை, ஊரான்கூடை கிராமத்தில் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள் முகமூடி அவிழ்ந்ததால் தலை தெறிக்க ஓடிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்தச் கொள்ளை சம்பவம் நேற்றுமுன்தினம் (14) நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மழையிலும் அடங்காத கொள்ளையர்கள்
மழை பெய்து கொண்டிருந்த நேரத்தில் முகமூடி அணிந்து, கைகளுக்கு கையுறை அணிந்து கொள்ளையர்கள் 3 பிள்ளைகளுடன் தனித்திருந்த பெண் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.

அங்கு மறைந்திருந்த கொள்ளையர்கள் இயற்கை உபாதைக்குச் சென்ற பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிக் கொள்ளையிட முயன்றுள்ளனர். பெண்ணை வீட்டுக்குள் கொண்டு செல்ல முயன்றபோது, பெண் கொள்ளையர்களுடன் போராடி காப்பாற்ற முயன்றுள்ளார்.

அப்போது கொள்ளையிட வந்தவர்களில் ஒருவரின் முகமூடியை அகற்றிய பெண் கொள்ளையனை இனங்கண்டுள்ளார். அதையடுத்து பெண்ணை அவர்கள் கொல்ல முயன்றபோது அவர்களிடம் தப்பித்த பெண் வீட்டுக்குள் ஓடியுள்ளார்.

கொள்ளையர்கள் தலை தெறிக்க ஓட்டம்
முகமூடி கழன்றதை அடுத்து கொள்ளையர்களும் தலை தெறிக்க அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

சம்பவத்தில் கழுத்தில் காயங்களுக்குள்ளான குடும்பப் பெண் தெல்லிப்பழை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாகத் தெல்லிப்பழைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, ஒரு வாரத்துக்கு முன்னர் குறித்த த வீட்டில் இருந்த எரி வாயு சிலிண்டர் களவாடப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.