தொடருந்து கேட் காவலர்களின் வேண்டுகோள்
![](https://www.athirady.com/wp-content/uploads/2024/01/Screenshot-2024-01-19-145105-750x430.jpg)
நாடளாவிய ரீதியில் உள்ள தொடருந்து கேட் காவலர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிக்குமாறு தொடருந்து கேட் காவலர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போது, 655 பாதுகாப்பற்ற தொடருந்து கேட்களில், 2,065 காவலர்கள் பணிபுரிகின்றனர், மேலும், எட்டு மணி நேர சேவைக்கு, நாளொன்றுக்கு, 250 ரூபாய் மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது.
இது போதாதென்று தொடருந்து கேட் காவலர்கள் சம்பளத்தை உயர்த்த கோரி வருகின்றனர்.