;
Athirady Tamil News

திருகோணமலை வைத்தியசாலையில் இப்படி ஒரு அவலம்!

0

திருகோணமலை பொது வைத்தியசாலையில் நோயாளியை கொண்டு செல்ல சக்கர நாற்காலி வழங்காததால் , மூதாட்டி ஒருவரை உறவினர்கள் அவரை தூக்கி சென்ற சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை வைத்தியசாலையில் எலும்பு முறிவுக்கு உள்ளாகி சிகிச்சை பெறுவதற்காக சென்ற நோயாளியை கொண்டு செல்வதற்கு சக்கர நாற்காலி வழங்கப்படவில்லை.

நோயாளிகள் கவலை
இதனால் மூதாட்டியை தூக்கிக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதுபோன்ற பல சம்பவங்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் இடம்பெற்று வருவதாகவும் தெரிய வருகின்றது.

அத்துடன் நோயாளிகளுக்கான கட்டில்கள் பற்றாக்குறையின் காரணமாக தரையில் காட்போட் அட்டைகளை விரித்து படுக்க வேண்டி இருப்பதாகவும் நோயாளிகள் கவலை வெளியிடுகின்றனர்.

திருகோணமலை வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர்கள், மருந்து மற்றும் வைத்தியசாலை உபகரணங்களின் பற்றாக்குறையின் காரணமாகவும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பணிப்பகிஷ்கரிப்பின் காரணமாகவும் தமக்கான சேவையினை பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாகவும் நேயாளிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.