;
Athirady Tamil News

மட்டக்களப்பு – தன்னாமுனை பகுதியில் விபத்திற்கு இலக்கான கார்

0

மட்டக்களப்பு – தன்னாமுனை பகுதியில் காரொன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (19.01.2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

செங்கலடியில் இருந்து மட்டக்களப்பு நகரை நோக்கி வந்த காரே விபத்திற்கு இலக்காகியுள்ளது.

கார் வேக்கட்டுப்பாட்டினை இழந்து தன்னாமுனை ஆற்றுப்பகுதியில் விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த வாகன உரிமையாளர் மட்டக்களப்பு கல்லடித்தெருவை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளதுடன் விபத்தில் குறித்த நபருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை எனவும் அறியமுடிகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.