க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்த தடை!
கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கு இன்றுடன் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை முடியும் வரை இந்த தடை அமுலில் இருக்குமென பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை இம்மாதம் 6ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 3527 நிலையங்களில் நடைபெறவுள்ளது.