;
Athirady Tamil News

விவசாயிகளால் அரசாங்கத்திற்கு காத்திருக்கும் பேரிடி!

0

அரசாங்கம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நெல் உத்தரவாத விலையை அதிகரிக்காவிட்டால், போராட்டத்தை தொடங்குவோம் என்று விவசாய அமைப்புகள் எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சமீபத்தில் அரசாங்கம், நெல்லுக்கான உத்தரவாத விலையை ஒரு கிலோ நாட்டு நெல்லுக்கு ரூ.120, ஒரு கிலோ சம்பா நெல்லுக்கு ரூ.125, மற்றும் ஒரு கிலோ கீரி சம்பா நெல்லுக்கு ரூ.132 என அறிவித்தது.

இந்த நிலையில், உத்தரவாத விலை போதுமானதாக இல்லை என்று விவசாயிகள் சங்கங்களும் விவசாயிகளும் தெரிவித்து விலையை அதிகரிக்க கூறி வருகின்றனர்.

அரிசி விலை அதிகரிப்பு
எவ்வாறாயினும், நெல்லுக்கான உத்தரவாத விலை அறிவிக்கப்பட்டதன் மூலம், சில அரசாங்க கையிருப்புகள், நெல் கொள்முதல் செய்ய தயாராக உள்ளன, எனினும் குறித்த திட்டத்திற்கு விவசாயிகள் யாரும் முன்வரவில்லை.

இவ்வாறனதொரு பின்னணியில், விவசாயிகள், அரசாங்கத்திற்கு நெல்லை வழங்குவதை விடவும், தனியார் ஆலை உரிமையாளர்களுக்கு நெல் வழங்குவது மிகவும் சாதகமானது என்று கூறுகின்றனர்.

எனினும், அதிக விலைக்கு நெல் வாங்குவதற்கு யாருக்கு வாய்ப்பு கிடைத்தாலும், அரிசியின் விலையை ஒருபோதும் அதிகரிக்க அனுமதிக்க மாட்டோம் என்று விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.