;
Athirady Tamil News

எலோன் மஸ்க்கின் 800 மில்லியன் டொலர் ஒப்பந்தம்: நிராகரித்த சுனிதா வில்லியம்ஸ்

0

டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க்கின் திட்டத்தை சுனிதா வில்லியம்ஸ் நிராகரித்தார்.

நாசா திட்டம்
சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரும் இம்மாத இறுதியில் பூமிக்கு திரும்புகின்றனர். அவர்களை பத்திரமாக அழைத்து வர பணிகளை நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில், சர்வதேச விண்வெளி நிலையத்தை (ISS) திட்டமிட்டதை விட முன்னதாகவே சுற்றுப்பாதையில் இருந்து அகற்ற வேண்டும்.

அதாவது, 2030ஆம் ஆண்டுக்கு முன்பாகவே அதனை செய்ய வேண்டும் என டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க் (Elon Musk) தெரிவித்தார்.

முன்னதாக, தசாப்தத்தின் இறுதிக்குள் பசிபிக் பெருங்கடலில் கட்டுப்படுத்தப்பட்ட விபத்தின் மூலம் ISSஐ சுற்றுப்பாதையில் இருந்து அகற்ற நாசா திட்டமிட்டுள்ளது.

இதற்கு உதவிட எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், கடந்த ஆண்டு 800 மில்லியன் டொலர்கள் ஒப்பந்தத்தைப் பெற்றது.

சரியான நேரம் இல்லை
இந்த நிலையில், சுனிதா வில்லியம்ஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் மஸ்க்கின் திட்டத்தை நிராகரித்துள்ளார்.

மேலும் பேசிய சுனிதா வில்லியம்ஸ், “நாங்கள் இப்போது எங்கள் சிறந்த நிலையில் இருக்கிறோம். இந்த இடம் மிகவும் அழகாக இருக்கிறது; இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. எங்களிடம் அனைத்து சக்திகளும், அனைத்து வசதிகளும் உள்ளன. அவை செயல்பட்டு வருகின்றன. எனவே இப்போது அதை நிறுத்துவதற்கு சரியான நேரம் இல்லை என்று நான் நினைக்கிறேன்” என்றார்.

அத்துடன் சர்வதேச விண்வெளி மையத்தின் ஆய்வகம் நிறைய அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.