தமிழர் பகுதியொன்றில் ஆறு பிள்ளைகளின் தந்தைக்கு நடந்தேறிய சோகம் ; துயரத்தில் கதறும் குடும்பம்
கிளிநொச்சி, இரணைமடுக் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று (17) பிற்பகல் மீன்பிடிக்க வலையை எறிந்து கொண்டிருந்தபோது, தவறி நீரில் விழுந்து மூழ்கி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தில், சாந்தபுரத்தைச் சேர்ந்த 64 வயதுடைய ஆறு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.