;
Athirady Tamil News

யாழில் தனியே வசித்த பெண் உயிர்மாய்ப்பு!

0

யாழில் வியாதிகளின் தாக்கம் தாங்க முடியாமல் வயோதிபப் பொண்ணொருவர் நேற்றையதினம் தவறான முடிவு எடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

நீர்வேலி வடக்கு நீர்வேலி பகுதியைச் சேர்ந்த அருந்தவரத்தினம் சத்தியஞானதேவி (70) என்பவரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இவருக்கு பல்வேறு விதமான வியாதிகள் காணப்படுகின்றன.

இந்நிலையில் வியாதியின் தாக்கம் தாங்க முடியாமல் நேற்றையதினம் கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.