;
Athirady Tamil News

நகுலேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு: மோடியின் 75வது பிறந்தநாள் விழா!

0

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் 75வது ஜனன தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம் புதன்கிழமை யாழ் கீரிமலை நகுலேஸ்வரர் விசே ஆலயத்தில் நகுலேஸ்வர பெருமானுக்கு விசேட பூசை வழிபாடுகள்நடைபெற்றதோடு சகஷ்டலிங்க விசேட அபிசேக பூஜை வழிபாடுகளும் நடைபெற்றன

யாழ் கீரிமலை நகுலேஸ்வரர் ஆதின பிரதம குரு நகுலேஸ்வர குருக்கள் சிறிரங்கநாதக் குருக்கள் தலைமையில் நடைபெற்ற பூசை வழிபாடுகளில் ஆலயத்தொண்டர்கள் பக்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2015ம் ஆண்டு இலங்கை விஐயத்தின் போது யாழ் கீரிமலை நகுலேஸ்வரர் சந்நிதானத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.