;
Athirady Tamil News

எச்சரிக்கை விடுக்கும் ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கம் ; போராட்டத்திற்கு தயாராகும் ஆசிரியர்கள்

0

முன்மொழியப்பட்ட கல்வி மறுசீரமைப்பு தொடர்பான தீர்மானங்களை அரசாங்கம் மாற்றாவிட்டால், அடுத்த ஆண்டு பாடசாலைகள் தொடங்குவதற்கு முன்பு அனைத்து ஆசிரியர்களையும் ஒன்றிணைத்து பாரிய தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாக ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

கல்வி மறுசீரமைப்புகளுக்கு இணங்க, பாடசாலை நடைபெறும் காலத்தை நீடிக்கவும், 50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை மூடவும் முன்மொழியப்பட்டுள்ளது.

இந்தநிலைமைகளால் மாணவர்கள் பெரும் அழுத்தத்திற்கு உள்ளாவார்கள் என குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், கல்வி மறுசீரமைப்பு குறித்து அரசாங்கம் தனது தீர்மானங்களை மாற்றாத பட்சத்தில், பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.