;
Athirady Tamil News

ஈரான் மீது தரைவழி தாக்குதலுக்கும் நாங்க ரெடி; டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை

0

இஸ்ரேல் – ஈரான் மோதலால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ள நிலையில், ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைகள் குறித்துப் பேசியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தேவைப்பட்டால் அமெரிக்கத் தரைப்படையை (Boots on the ground) ஈரானுக்குள் அனுப்பத் தயங்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

ஈரானில் , அமெரிக்கா தற்போது வான்வழித் தாக்குதல்கள் நடந்து வரும் நிலையில், அடுத்து வரவிருக்கும் தாக்குதல்கள் மிகவும் தீவிரமாக இருக்கும் என்றும், அது ஒரு ‘பெரிய அலையாக’ (Big wave) அமையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மோதலின் தீவிரம் மற்றும் விளைவுகள்
ஈரான் மீதான தாக்குதல்கள் தற்போது வரை வெற்றிகரமாக நடந்து வருவதாகக் குறிப்பிட்ட டிரம்ப், தரைப்படை அனுப்புவது தற்போதைய சூழலில் தேவையற்ற ஒன்றாக இருந்தாலும், சூழ்நிலை ஏற்பட்டால் அதைத் தவிர்க்க மாட்டோம் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் முக்கிய இராணுவ நோக்கங்கள் நிறைவேறும் வரை இந்த நடவடிக்கைகள் தொடரும் என்றும் டிரம்ப் உறுதியளித்துள்ளார். இதற்கிடையில், இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான், இஸ்ரேல் மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீதும் ஏவுகணைகளை வீசியுள்ளது.

இந்த மோதல் பிராந்தியத்தில் உள்ள எண்ணெய் உற்பத்தி நாடுகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதால், உலகளாவிய எரிசக்தி விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற கவலை எழுந்துள்ளது. ஈரான், இஸ்ரேல் இரு தரப்பும் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதால், பதற்றம் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது

சர்வதேச சமூகம் இரு தரப்பையும் அமைதி காக்குமாறு வலியுறுத்தி வரும் நிலையில், இராணுவ நடவடிக்கை மட்டுமே தீர்வு என்ற நிலைக்கு பிராந்தியம் தள்ளப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.