;
Athirady Tamil News

143 ஆம் இலக்க தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

0

பயணிகளை ஏற்றிச் செல்வது தொடர்பாக , ஹங்வெல்ல – கொழும்பு 143 ஆம் இலக்க தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

கடுவலை – கொழும்பு பேருந்து ஊழியர்களுடன் பயணிகளை ஏற்றிச் செல்வது தொடர்பாக, ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தலைவர் காமினி ஜயசிங்க இது குறித்துக் தெரிவிக்கையில், பிரச்சினைக்கு காரணமான இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைக்காக அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இன்று முற்பகல் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.