வடக்குக்கான புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பம்
வடக்கு ரயில் மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து சேவைகள் இன்றைய தினம் வியாழக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மஹவ முதல் ஓமந்தை வரையிலான ரயில் பாதையில் ஐந்து ரயில் பாலங்களை மாற்றியமைக்கவும், யானைகள் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையைப் புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ளவும் ஏதுவாக, வடக்குக்கான ரயில் சேவைகள் கடந்த ஜனவரி மாதம் 26ஆம் திகதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில், தமிழ் – சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு, ரயில் சேவைகள் இன்றைய தினம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
