சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் (SLYC) நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் விழிப்புணர்வு
சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் (SLYC) நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் விழிப்புணர்வு செவ்வாய்க்கிழமை(28) அம்பாறை மாவட்ட செயலகத்தின் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் சமூக மட்டத்தில் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் (SLYC) பயிற்சி நெறியினை மேற்கொள்ளும் பயிலுனர்களுக்கான நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நிலையத்தில் பொறுப்பதிகாரி எம்.வை ஹரூன் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது பாவனையாளர் உரிமைகள்,பொறுப்புகள்,சட்டங்கள்
இவ் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பிரதான வளவாளராக அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலன் விசாரணை அதிகாரி இஷட்.எம் ஸாஜீத் மற்றும்,ஏ.பீ.எம் றிப்சாத் ஆகியோருடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் விரிவுரையாளர்களும் கலந்து கொண்டனர்.
