;
Athirady Tamil News

அல்பெர்ட்டா பிரிந்து செல்ல வேண்டுமா! 3 லட்சம் கையெழுத்துகளுடன் மனு தாக்கல்!

0

கனடாவிலிருந்து அல்பெர்ட்டா மாகாணம் பிரிந்து செல்ல வேண்டுமா என்பது குறித்து பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு (Referendum) நடத்தக் கோரி, சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான கையெழுத்துகள் அடங்கிய மனு தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

‘ஸ்டே ஃப்ரீ அல்பெர்ட்டா’ (Stay Free Alberta) அமைப்பின் தலைவர் மிட்ச் சில்வெஸ்டர், திங்கள்கிழமை எட்மண்டனில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இந்த மனுவை அளித்தார்.

சட்டப்படி 1.78 லட்சம் கையெழுத்துகள் தேவைப்படும் நிலையில், தாங்கள் 3,00,000-க்கும் அதிகமான கையெழுத்துகளைச் சேகரித்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஒருவேளை இந்த மனு அங்கீகரிக்கப்பட்டால், வரும் அக்டோபர் மாதம் தேர்தல் வாக்குகளுடன் இந்தப் பிரிவினை குறித்த கேள்வியும் இடம்பெற வாய்ப்புள்ளது.

பழங்குடியின மக்களின் (First Nations) உரிமைகளை இது மீறுவதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கு ஒன்றின் தீர்ப்பு விரைவில் வரவுள்ளது.

முன்னாள் துணைப் பிரதமர் தாமஸ் லுகாசுக் தலைமையிலான ‘ஃபாரெவர் கனடியன்’ (Forever Canadian) என்ற குழு, அல்பெர்ட்டா கனடாவுடனேயே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஏற்கனவே 4.56 லட்சம் கையெழுத்துகளைச் சமர்ப்பித்துள்ளது.

வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்கள் சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்டதாக எழுந்துள்ள புகாரைத் தொடர்ந்து, இந்த மனுவில் உள்ள கையெழுத்துகளை மிகவும் தீவிரமாகச் சரிபார்க்கப் போவதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கையெழுத்துகளின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட்ட பிறகு, இந்த மனு மாகாண சட்டசபையின் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். இதன் மூலம் கனடா அரசியலில் ஒரு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.