;
Athirady Tamil News

பாகிஸ்தானின் கராச்சியில் வீசும் வெப்ப அலை: 10 போ் உயிரிழப்பு

0

பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் வீசி வரும் வெப்ப அலை காரணமாக இதுவரை 10 போ் உயிரிழந்துள்ளனா்.

கடந்த 2018-க்குப் பிறகு மிக அதிகபட்சமாக, நகரில் கடந்த திங்கள்கிழமை வெப்பநிலை 111 டிகிரி ஃபாரன்ஹிட்டைத் தாண்டி பதிவானது.

நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து திங்கள்கிழமை மட்டும் 5 சடலங்கள் மீட்கப்பட்டன. ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் 5 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

வரும் நாள்களிலும் வெப்ப அலை நீடிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், கராச்சியில் நிலவும் மின்வெட்டுப் பிரச்னையும் மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.