;
Athirady Tamil News

நீராடிக்கொண்டிருந்த சிறுவன் துஷ்பிரயோகம்; இரு மாணவர்கள் கைது

0

குளத்தில் நீராடிக்கொண்டிருந்த 12 வயது சிறுவனுடைய மலக்குடலில், பாசி மற்றும் தாமரைத் தண்டினைப் பலவந்தமாக நுழைத்த இரண்டு மாணவர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளன​ர்.

இந்த சம்பவம், நவகத்தேகம, பலகதவெவ பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய ஒரு மாணவனும், மஹபெத்தாவ பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய மற்றொரு மாணவனும் ஆவர். சிறுவன் குளத்தில் நீராடிக்கொண்டிருந்த போது, அந்த வழியாகச் சென்ற இரண்டு சந்தேக நபர்களும் சிறுவனை அணுகியுள்ளனர்.

சிறுவனை நிர்வாணப்படுத்தி, குளத்திலிருந்த பாசி மற்றும் தாமரைத் தண்டினைச் சிறுவனுடைய மலக்குடலில் பலவந்தமாக நுழைத்துள்ளமை பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களிடம் மேலதிக விசாரணைகளை நவகத்தேகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.