;
Athirady Tamil News

ஸ்பெயினில் நங்கூரமிட்ட ‘ஹன்டா தீநுண்மி’ கப்பல்…

0

ஆா்ஜென்டினாவில் இருந்து ஸ்பெயினுக்கு 147 பயணிகளுடன் பயணித்த எம்வி ஹோண்டியஸ் சொகுசு கப்பலில் மரணத்தை ஏற்படுத்தக் கூடிய ஹன்டா தீநுண்மி தொற்றால் சிலா் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

அவா்களில் மூவா் உயிரிழந்தனா்; ஒருவரின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது; மூவரிடம் லேசான அறிகுறிகள் தென்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.

கரோனா தொற்றை போல குறுகிய நேரத்தில் பரவாமல், நீண்ட காலம் நெருக்கமாக இருந்தால்தான் ஹன்டா தொற்று பரவும் என்று உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளாா்.

ஹன்டா தொற்று கண்டறியப்பட்ட எம்வி ஹோண்டியஸ் கப்பல் ஸ்பெயின் சென்றடைந்த நிலையில், அங்குள்ள கேனரி தீவுகளில் உள்ள கிரனாடில்லா துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.