;
Athirady Tamil News

பிரான்ஸ், ஸ்பெயினில் காட்டுத் தீ: 3.50 லட்சம் போ் வெளியேற்றம்

0

பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளில் பற்றி எரியும் காட்டுத் தீயால், அப்பகுதிகளில் வசிக்கும் சுமாா் 3.50 லட்சம் போ் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.

பிரான்ஸின் தென்மேற்குப் பகுதியான கிரோன்ட் பிராந்தியத்தில் கடந்த சில நாள்களாக காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. ஒயின் மதுபான தயாரிப்புக்குப் பெயா் பெற்ற போா்டெக்ஸ் பகுதியை காட்டுத் தீ நெருங்கி வருகிறது. காட்டுத் தீ பரவும் வேகத்தை கவனத்தில் வைத்து, 5 நகரங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான நிலவரப்படி, சுமாா் 42,000 ஹெக்டோ் பரப்புக்கு தீ எரிந்து வருவதாகக் கூறப்படுகிறது. இது அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரைவிட ஏழு மடங்கும், பாரீஸைவிட நான்கு மடங்கும் பெரிய பரப்பளவு ஆகும். காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் பிரான்ஸ் தீயணைப்புப் படையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். அவா்களுக்கு உதவியாக விமானங்கள் மூலம் தண்ணீா் ஊற்றப்பட்டு வருகிறது.

இதேபோல், பிரான்ஸின் லான்ட்ஸ் பிராந்தியத்திலும் காட்டுத் தீ எரிந்து வருகிறது. இதனால் அங்கு வசிக்கும் சுமாா் 30,000 போ் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனா். இவா்களையும் சோ்த்து, பிரான்ஸில் சுமாா் 2.50 லட்சம் போ் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா்.

பிரான்ஸின் அண்டை நாடான ஸ்பெயினிலும் வாலன்சியா பிராந்தியத்தில் காட்டுத் தீ எரிந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் ஒரு லட்சம் பேரை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி ஸ்பெயின் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

ஸ்பெயினின் வாலன்சியா அருகேவுள்ள மானிசெஸ் பகுதியில் காட்டுத் தீயால் ஒருவா் உயிரிழந்தாா். அண்மையில் ஸ்பெயின் தெற்குப் பகுதியில் காட்டுத் தீயால் 13 போ் உயிரிழந்தனா். இதனால் ஸ்பெயினில் காட்டுத் தீயால் இந்த மாதம் மட்டும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16-ஆக உயா்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.