பிரபல ஹோட்டலுக்குள் நுழைந்த முதலை; அழையா விருதாளியால் பரபரப்பு
கொழும்பு பத்தரமுல்லையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் விருந்து மண்டபத்திற்குள் நுழைந்த முதலை ஒன்று பத்திரமாக அகற்றப்பட்டது.
சம்பவத்தின் போது அங்கு எத்தகைய நிகழ்வுகளும் நடைபெறவில்லை என்றபோதிலும், அந்த முதலை விருந்து மண்டபத்திற்குள் நுழைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஹோட்டல் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனர்.
இதனையடுத்து, அந்த முதலை வளாகத்திலிருந்து அகற்றப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக எத்தகைய காயங்களோ அல்லது சேதங்களோ ஏற்பட்டதாகப் முறைப்பாடுகள் எதுவும் பதிவாகவில்லை.