;
Athirady Tamil News

உக்ரைன் வணிக வளாகம் மீது ரஷியா டிரோன் தாக்குதல்; 16 பேர் பலி

0

கீவ்,

உக்ரைன் , ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொண்டார். ஆனால் முயற்சி தோல்வியடைந்த நிலையில் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

16 பேர் பலி
இந்நிலையில், உக்ரைனின் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் மாகாணம் கார்வி ரிக் நகரில் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகம் மீது ரஷியா நேற்று டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த டிரோன் தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.