பேருந்தை யானை தாக்கியதில் 10 பேர் காயம்
கதிர்காமம் – புத்தல வீதியில் தனியார் பேருந்து ஒன்றின் மீது காட்டு யானை நடத்திய தாக்குதலில், பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இன்று காலை கதிர்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கதிர்காமம் – புத்தல வீதியின் மின்சார வேலி காவல் அரணுக்கு அருகில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.