;
Athirady Tamil News

அரச சேவை வலைப்பந்தாட்ட தேசிய மட்டப் போட்டிகள் யாழில் ஆரம்பம்

0
அரச சேவை தேசிய மட்ட வலைப்பந்தாட்டப் போட்டிகள் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணம் மட்டுவில் வளர்மதி விளையாட்டுக் கழகத்தில் ஆரம்பமானது.
போட்டிகளில் இலங்கை அரச சேவைகளை பிரதிநிதித்துவப்படுத்திய 20  பெண்கள்அணிகள் பங்கேற்றுள்ளது.

இன்றைய தினம் ஆரம்பமான போட்டிகள் எதிர்வரும் நாட்களில் தொடர்ந்து போட்டிகள் நடைபெற்று, எதிர்வரும் 19ஆம் திகதி இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.

போட்டிகளின் ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட மேலதிக செயலாளர் கைலாசப்பிள்ளை சிவகரன் கலந்து கொண்டதுடன் , சிறப்பு விருந்தினர்களாக அரச சேவை வலைப்பந்துப் போட்டியின் தலைவர் ரிக்ஷி நனயகரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.