;
Athirady Tamil News

திக்கத்தில் கஞ்சாவுடன் மூவர் கைது!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை , திக்கம் பகுதியில் சுமார் 1 கிலோ 900 கிராம் கேரளா கஞ்சா பொதியுடன் மூவர் கைது செய்யப்பட்டள்ளனர். குறித்த பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில்…

ரணில் விக்கிரமசிங்க ரஷ்ய அதிகாரிகளுக்கு விடுத்தள்ள அறிவிப்பு!!

ரஷ்ய Aeroflot விமானம் தொடர்பான பிரச்சினை இராஜதந்திர பிரச்சினையல்ல என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ரஷ்ய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். இது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை வெளிவிவகார அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக…

லாப்ஸ் மற்றும் லிட்ரோ நிறுவனங்களின் அறிவிப்பு!!

லாப்ஸ் எரிவாயு விநியோகம் இன்று (05) ஆரம்பமாகவுள்ளது. 3,500 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிச் வந்த கப்பலில் இருந்து நேற்று (04) இரவு முதல் எரிவாயுவை இறக்கி வருவதாக அதன் தலைவர் வேகபிட்டிய தெரிவித்தார். அதன்படி, இன்று முதல், கொழும்பு…

யாழ். போதனா வைத்தியசாலைக்கு இந்தியா உதவி !!

யாழ். போதனா வைத்தியசாலைக்கு உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இந்திய அரசாங்கம் வழங்கியது. இரண்டு வாகனங்களில் கொண்டுவரப்பட்ட இந்த மருந்துப் பொருட்களை யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன்,…

பொன் சிவகுமாரனின் 48 வது நினைவேந்தல் பிரதேச சபையினால் அனுஷ்டிப்பு!! (படங்கள்)

தியாகி பொன் சிவகுமாரனின் 48 ஆவது ஆண்டு அஞ்சலி நிகழ்வுகள் உரும்பிராயில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையினால் உத்தியோகபூர்வமாக இன்று காலை அனுஷ்டிக்கப்பட்டது. பிரதேச சபையின் அவைத் தீர்மானத்தின் பிரகாரம், இன்று காலை உரும்பிராயில் உள்ள…

பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தின வருடாந்த பெருவிழா!! (படங்கள்)

பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தின வருடாந்த பெருவிழாவில் ஆரம்பமான நிலையில் ஆலய திருநாட்களின் ஒன்றான கடல் அந்தோனியார் பெருவிழா நேற்று(04) மாலை இடம்பெற்றது. கடற்றொழிலாளர்களின் பாதுகாவலராக விளங்குவதை நன்றியுடன் நினைவுகூரும் இப் பெருவிழா…

காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!!

கல்முனையில் பொது மைதானத்தில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவில் உடையார் வீதியை சேர்ந்த 58 வயதுடைய ஒரு…

இன்றைய வானிலை முன்னறிவிப்பு !!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என…

ரஷ்ய விமானம் தொடர்பில் விளக்கம் !!!

ரஷ்ய 'எரோஃப்ளோட்' நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் தடுத்து வைக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் இருநாடுகளுக்கு இடையில் பிரச்சினை இல்லை என துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.…

தமிழக முதல்வா் வழங்கிய உறுதி மொழி!!

இலங்கைக்கு கூடுதல் உதவிப் பொருள்களை அனுப்ப தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தாா். சென்னை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை தன்னைச் சந்தித்த இந்தியாவுக்கான இலங்கை தூதா் மிலிந்த மொரகொடவிடம் இந்த உறுதியை அவா் அளித்தாா். கடுமையான…

கடுக்காய் மருத்துவம் !! (மருத்துவம்)

மூலிகைகளில் தலைசிறந்த மூலிகை கடுக்காயகும். இது எண்ண முடியாதளவு மருத்துவ குணங்கள் கொண்டது. சுக்கைப் பயன்படுத்துவதற்கு முன்பு, அதன் புறத்தோலை நீக்க வேண்டியது அவசியம். அதேபோல் கடுக்காய்க்கு அதன் வித்தை நீக்கியே பயன்படுத்த வேண்டும்.…

நிரபராதிகள் மீதான அரச பயங்கரவாதத்தின் மிலேச்சத்தன தாக்குதல்!! (கட்டுரை)

ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் எதிராக ஒரு மாதகாலமாக காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட ‘கோட்டா ஹோ கம’, அலரிமாளிகையின் முன்பாக 13 நாள்களாக நடத்தப்பட்ட ‘மைனா ஹோ கம’ மீது, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் குண்டர்களால் நேற்று (09) மிலேச்சத்தனமான…

வேலணை அமரர் சீவரத்தினம் கனகம்மா அவர்களின் சிரார்த்த தினத்தில் “விசேட அன்னதான”…

வேலணை அமரர் சீவரத்தினம் கனகம்மா அவர்களின் சிரார்த்த தினத்தில் "விசேட அன்னதான" நிகழ்வு.. (படங்கள், வீடியோ) ################################ வேலணையைச் சேர்ந்தவரும், அங்கு வாழ்ந்து அமரத்துவமடைந்தவருமான அமரர் சீவரத்தினம் கனகம்மா அவர்களது…

சாய்ந்தமருது பகுதியில் விழிப்பூட்டல் செயல்திட்டம்!!

கல்முனை பிராந்திய சுகாதார பணிமனைக்குட்பட்ட பகுதிகளில் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ள நிலையில் தற்போது விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று (4) முதல் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேற்கொள்ளப்பட்டது. இதற்கமைய இப்…

கிளிநொச்சியில் வாய்க்காலுக்குள் வீழ்ந்து குழந்தை பலி !!

கிளிநொச்சி - மருதநகர் பகுதியில் நிசாந்தன் சபீசன் என்ற ஒன்றரை வயது குழந்தை நீர்ப்பாசன வாய்க்காலுக்குள் வீழ்ந்து இறந்துள்ளான். இந்த சம்பவம் இன்று மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த குழந்தையின் வீட்டிற்கு அருகில் இரணைமடு…

யாழ்.கோண்டாவிலில் தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்!!

யாழ்.கோண்டாவில் பகுதியில் உள்ள வாகன திருத்துமிடம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வாகனத் திருத்துமிடத்தில் மோட்டார் சைக்கிளின் பாகம் ஒன்று மின்சாரம் மூலம்…

துப்பாக்கிச் சூடு – 27 வயது இளைஞன் பலி!!

அஹங்கம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அஹங்கம, பன்சாலிய பகுதியில் இன்று மாலை இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ…

கொழும்புத்துறையில் குடும்பத்தலைவர் கொலை; தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட எதிரிகள் இருவரும்…

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை குடும்பத்தலைவர் கொலை வழக்கில் எதிரிகள் இருவருக்கும் விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கொலைக் குற்றத் தீர்ப்பையும் தூக்குத் தண்டனையையும் தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம்…

போதை நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி!!

யாழில் காதலனுடன் தீவுப் பகுதிக்கு பயணித்த தெல்லிப்பளை யுவதி ஒருவர் , போதையான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள்ளதாக கூறப்படுகின்றது. தெல்லிப்பளை சேர்ந்த குறித்த 20 வயது யுவதி, மண்டைதீவிற்கு இடம் பார்ப்பதாக தெரிவித்து…

சுவரை உடைத்துக் கொண்டு வீடொன்றில் புகுந்த லொறி!!

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலில் பிரிவுக்குட்பட்ட பகுதியில் லொறியொன்று பாதையை விட்டு விலகி வீடொன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்து கந்தளாய் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கந்தளாய் பொலிஸார்…

6 முதல் 10 ஆம் திகதி வரை மின்வெட்டுக்கு அனுமதி!!

எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை நாட்டில் மின்வெட்டினை மேற்கொள்ளப்பட்ட தேசிய பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, ஜூன் 6 முதல் 10 வரை 2 மணித்தியாலங்கள் 15 நிமிடங்களும் மற்றும் ஜூன் 11 மற்றும் 12 ஆம்…

ஐந்து நாட்களும் ஆசிரியர்களை அழைப்பது சாத்தியமில்லை!!

நாட்டில் தற்போதுள்ள சூழ்நிலையானது ஒட்டுமொத்தமாக வாழ்க்கையை கொண்டு நடாத்த முடியாத நிலைமையாக உள்ளது. இந்நிலையில் பாடசாலைகளை வாரத்தில் ஐந்து நாட்களும் நடாத்துவதென்பது பெரும் நெருக்கடியான விடயம் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்…

வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி: ஒருவர் படுகாயம்!! (படங்கள்)

வவுனியா, ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (04.06) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…

வவுனியா பொலிசாரால் மூன்று இளைஞர்கள் கைது!! (படங்கள்)

வவுனியாவில் 9 இடங்களில் இடம்பெற்ற பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் இன்று (04.06) தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் வவுனியாவின் உக்குளாங்குளம் பகுதியில் 4 வீடுகளிலும், பண்டாரிக்குளம்…

உலக சூழல் பாதுகாப்பு தினத்தினை முன்னிட்டு நடுகை !! (படங்கள்)

உலக சூழல் பாதுகாப்பு தினத்தினை முன்னிட்டு கரையோர பாதுகாப்பு சபையுடன் இணைந்து இன்றைய தினம் மங்குறூஸ் மரக்கன்றுகள் 500 சாம்பல் தீவு களப்பு பகுதியில் green forest ceylon அமைப்பினரால் நடுகை செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர்…

வெவ்வேறு விபத்துக்களில் ஐவர் பலி!!

இன்று (04) காலை தனமல்வில - உடவலவ வீதியில் சூரியஹார பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தின் போது முச்சக்கர வண்டியில் 9…

கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!!

அரச மற்றும் அரச தனியார் பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (6) முதல் மீள ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக இவ்வாறு பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ளன.…

5000 ரூபாய் கொடுப்பனவு வழங்க நடவடிக்கை!!

சமுர்த்தி பெறுவோர் மற்றும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள முதியோர், ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக பயனாளிகளுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பந்துல…

யாழ் மக்களுக்கு 5000 ரூபா.! அரச அதிபர் அறிவிப்பு!!

யாழ் மாவட்டத்தில் உள்ள 78 ஆயிரத்து 442 சமுர்த்திப் பயனாளிகளுக்கு அரசாங்கத்தின் 5ஆயிரம் ரூபா கொடுப்பனவுகள் வங்கிகளில் வைப்பிலிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். அவர் மேலும்…

துரித வேலைத்திட்டத்திற்கு ஜனாதிபதி பணிப்புரை!!

பெருந்தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான அனைத்துப் பயன்படுத்தப்படாத நிலங்களைக் கண்டறிந்து, உணவுப் பயிர்களைப் பயிரிடுவதற்கான துரித வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். பெருந்தோட்ட…

குழந்தைகள் மத்தியில் உட்டச்சத்து குறைப்பாடு!!

கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் குழந்தைகளுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட மாதிரி பரிசோதனையில் 20% மான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் என தெரியவந்துள்ளது. வைத்தியசாலையின் குழந்தைகள் நல சிறப்பு வைத்தியர்…

பொன் சிவகுமாரனின் 48 ஆவது நினைவேந்தல் நாளை!!

தியாகி பொன் சிவகுமாரன் அவர்களது 48 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் உரும்பிராயில் உள்ள நினைவிடத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். பிரதேச…

எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிப்பு குறித்த அறிவிப்பு!!!

லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களை அடுத்த வாரமளவில் சந்தைக்கு விநியோகிக்க முடியும் என எதிர்ப்பார்ப்பதாக அந் நிறுவனம் அறிவித்துள்ளது. அதேபோல், லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரிக்கக்கூடும் எனவும் அந்நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர்…