;
Athirady Tamil News
Yearly Archives

2022

எரிபொருள் விற்றல் தொடர்பில் சுற்றிவளைப்பு நடவடிக்கை – அரசாங்க அதிபர் க . மகேசன்!!…

பொது மக்கள் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்பவரிடம் பொருட்களை கொள்வனவு செய்வதை தவிர்க்க வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க மகேசன் தெரிவித்தார் இன்று யாழ் மாவட்ட…

மாநிலங்களவை தேர்தல்: வேட்புமனுவை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்..!!

டெல்லியில் உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவையில் நாடு முழுவதும் காலியாகும் 57 இடங்களுக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் கர்நாடகத்தில் 4 இடங்கள் காலியாக உள்ளன. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வந்தது. காங்கிரஸ் வேட்பாளர்கள்…

குரங்கு அம்மை தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!!

குரங்கு அம்மையை கட்டுப்படுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. தொற்று பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்களை 21 நாட்கள் கண்காணிக்குமாறு கூறியுள்ளது. உலகம் முழுவதும் 24 நாடுகளில் சுமார் 400 பேருக்கு குரங்கு…

லெஸ்பியன் ஜோடி சேர்ந்து வாழ கேரளா உயர்நீதிமன்றம் அனுமதி..!!

திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த 22 வயதான அதிலா நஸ்ரினும், 23 வயதான பாத்திமா நூராவும் பள்ளி நாட்களில் இருந்தே உறவு முறையில் பழகி வந்துள்ளனர். அவர்களது நட்பு கல்லூரி காலத்திலும் தொடர்ந்துள்ளது. பட்டப்படிப்பு முடிந்ததும், பிரிய மனமின்றி…

எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி கொழும்பு துறைமுகத்தில் இலவச மிதிவண்டி சேவை தொடக்கம்..!!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. அந்நாட்டு அரசு பெரும் கடன் சுமையில் சிக்கியுள்ளது. இதனால் கடும் விலைவாசி உயர்வு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு உள்ளிட்ட…

சிகரெட்டின் புதிய விலை வெளியானது !!

அனைத்து உள்ளூர் சிகரெட்டுகளின் விலைகளும் இன்று (01) முதல் 5 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளன. வற் வரியை அதிகரிக்க அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாகவே இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.…

வேலை பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளத்தையே இந்தியா விரும்புகிறது- ராகுல் காந்தி..!!

மத்திய கலாச்சார அமைச்சகம் இந்திய மரபணு வரலாறு மற்றும் இந்தியாவில் இனத்தின் தூய்மை குறித்து ஆய்வு திட்டத்திற்காக டிஎன்ஏ விவரக்குறிப்பு கருவிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அதிநவீன இயந்திரங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.…

பிரதமர் காப்பீட்டு திட்டங்களுக்கான பிரீமியம் உயர்வு..!!

டெல்லி: நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்காக பிரதமரின் விபத்து காப்பீட்டு திட்டம், பிரதமரின் ஆயுள் காப்பீட்டு திட்டம் கடந்த 2015 ம் ஆண்டில் இருந்து செயல்படுத்தப்படுகின்றன. தற்போது இந்த காப்பீட்டு திட்டங்களுக்கான பிரீமியம் தொகை நேற்று…

மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு..!!

சாதாரண மக்களுக்கு குறிப்பாக ஏழைகளுக்கு மலிவு விலையில் தரமான மருந்துகளை வழங்குவதற்கான தொலைநோக்குப் பார்வையுடன், பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தக திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டின் 739…

தொழிலாளர் திணைக்களம் வெள்ளிக்கிழமைகளில் பூட்டு!!

தொழிலாளர் திணைக்களம் (EPF-ETF) மறு அறிவிப்பு வரும் வரை வெள்ளிக்கிழமைகளில் தமது அலுவலகங்களை மூட முடிவு செய்துள்ளது. தொழிலாளர் ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். அதன்படி, தொழிலாளர் திணைக்களத்தின் தலைமை…

சாதாரண தரப் பரீட்சை மதிப்பீட்டு நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு!! (வீடியோ)

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் முதல் கட்டப் மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஜூன் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார். ஜூன் 26 ஆம் திகதி வரை இந்த மதிப்பீடு நடவடிக்கைகள் தொடரவுள்ளதாக அவர்…

துமிந்த சில்வா மீண்டும் கைது!!

துமிந்த சில்வா ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்…

வன்முறைகளை ஆராய ஆணைக்குழு நியமனம் !!

2022 மார்ச் 21ஆம் திகதி முதல் 2022 மே 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வன்முறைகள் குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. தாக்குதல்கள், கொள்ளைகள், கொலைகள், சொத்துக்கள் எரிக்கப்பட்ட சம்பவங்கள்…

கொள்ளுபிட்டிய, காலி முகத்திடல் தாக்குதல் – நீதிமன்றத்தின் உத்தரவு!!

பாராளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக்க மற்றும் 11 சந்தேகநபர்களும் ஜூன் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் குற்றப்…

சமூக ஊடகங்களில் பகிரப்படும் புகைப்படங்கள் தொடர்பில் விசாரணை!!

கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழைக்கு மத்தியில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முகம்கொடுக்கும் மாணவர்களிள் புகைப்படங்கள் சில சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.…

தமிழ் அரசுக் கட்சியினரால் புங்குடுதீவில் உலருணவு வழங்கிவைப்பு!! (படங்கள் இணைப்பு)

புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தினை சேர்ந்தவரும் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வருபவருமான திரு வடிவேல் சுப்பையா அவர்களின் 67வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது குடும்பத்தினரின் நிதியுதவியில் 29/05/2022 அன்று புங்குடுதீவு நான்காம்…

மதுபானம், சிகரெட் விலை உயர்கிறது !!

பெறுமதி சேர் வரி (வற்) 8 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக, அனைத்து உள்ளூர் மதுபானங்களின் விலைகளும் இன்று (01) முதல் அமலாகும் வகையில் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுபானப் போத்தல் ஒன்றின் விலை…

திங்கள் முதல் தனியார் பஸ் சேவை முடங்கும் !!

எதிர்வரும் திங்கட்கிழமை (06) முதல் அனைத்து தனியார் பஸ்களும் சேவையில் ஈடுபடாது என்று அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். இந்தவாரம் பஸ்களுக்கு டீசல் வழங்குவதற்கு அரசாங்கம் முன்னுரிமை…

பொருட்கள் இறக்குமதி தொடர்பில் வௌியான வர்த்தமானி அறிவித்தல்!!

இலங்கைக்குள் இறக்குமதி செய்ய மட்டுப்படுத்தப்பட்டிருந்த 369 வகையான அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. செல்லுப்படியாகும் உரிமம் இல்லாவிடின், அத்தியாவசியமற்ற 369 பொருட்களை இலங்கைக்குள் இறக்குமதி செய்வதை…

அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு!!

பற்றாக்குறையாக உள்ள அத்தியாவசிய மருந்துகளை விரைவில் இறக்குமதி செய்யாவிட்டால் எதிர்காலத்தில் பல பிரச்சினைகள் ஏற்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. தற்போது 12 முதல் 20 வரையான அத்தியாவசிய மருந்துகளுக்கு…

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு பணிப்புரை!!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு இடையில்…

சிறுமியை துஸ்பிரயோகம் செய்த சிறுவர்களுக்கு விளக்கமறியல்!!

அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 11 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 16 வயது சிறுவர் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று (31) உத்தரவிட்டார்.…

துமிந்தவை கைதுசெய்ய புறப்பட்டது சீ.ஐ.டி !!

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா சற்று முன்னர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரைக் கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்கள…

வடமாகாணத்திற்கு 138 வைத்திய அதிகாரிகள் நியமனம்!!

வடமாகாணத்திற்கு 138 வைத்திய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் 132 வைத்திய அதிகாரிகள் இதுவரை தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்கள் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். வைத்திய அதிகாரிகள்…

யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் எரிக்கப்பட்டமையின் 41வது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு!!…

யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 41வது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ் மாநகர சபையின் ஏற்பாட்டில் இன்று காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.…

ஜீவனால் பெரும் தலையிடி!!

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ள மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக, தமிழக அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருள்களை பகிர்ந்தளிக்கும் போது, பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளருமான…

கோட்டாபய வெளியேறினால் பசில் ஜனாதிபதி: வாசு !!

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் பசில் ராஜபக்ஷ ஜனாதிபதியாக வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார…

இறுதியாகவே மஹிந்த அழைக்கப்படுவார் !!

மே மாதம் 9ஆம் திகதி “மைனா கோ கம” மற்றும் “கோட்டா கோ கம” என்பவற்றின் மீது தாக்குதல் நடத்தியமைதொடர்பான விசாரணைகளுக்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று (1) மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

கொழும்பை சேர்ந்த பெண் உள்ளிட்ட மூவர் தமிழகத்தில் தஞ்சம்!! (படங்கள்)

கொழும்பை சேர்ந்த தாய் , மகன் உள்ளிட்ட மூவர் படகு மூலம் தமிழகம் சென்று தஞ்சம் கோரியுள்ளனர். கொழும்பை சேர்ந்த ஜெசிந்தா மேரி , அவரது 10 வயதுடைய மகன் மற்றும் மன்னார் சிலாவத்துறையை சேர்ந்த அனிஸ்டன் உள்ளிட்ட மூவரே தஞ்சமடைந்துள்ளனர்.…

ரயில் போக்குவரத்து பாதிப்பு !!

கரையோர ரயில் மார்க்கத்தின் ஊடான போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது. பூஸ்ஸ ரயில்வே கடவைக்கு அருகாமையில், இன்று காலை ரயிலுடன் வாகனமொன்று மோதுண்டதில், இவ்வாறு போக்குவரத்துத் தடை ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்…

மிருகங்களுக்கு உணவு வழங்குவதில் சிக்கல் !!

நிதி நெருக்கடி காரணமாக, தெஹிவலை மிருகக்காட்சிசாலையில் உள்ள மிருகங்களுக்கு உணவுகளை வழங்குவதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வனஜீவிகள் திணைக்களத்தின் அதிகாரிகளினால், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு இது…

21 ஆவது திருத்தத்தை எதிர்க்கவில்லை: சஜித் பிரேமதாஸ !!

ஐக்கிய மக்கள் சக்தியினர் 21 ஆவது அரசயலமைப்புத் திருத்தத்தை எதிர்ப்பதாக வெளியாகும் செய்தி, உண்மைக்குப் புறம்பானது என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். 21 ஆவது திருத்தத்தை ஐக்கிய மக்கள் சக்தியினரே நாட்டுக்கும்…

ஹஜ் கடமைக்கு செல்வதற்கான அனுமதி மறுப்பு !!

இலங்கையில் இருந்து இம்முறை ஹஜ் கடமைக்காக யாத்திரியர்களை அனுப்பாமலிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்தது.…

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!!

நாட்டின் எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு, காலி, களுத்துறை, நுவரெலியா, மாத்தறை மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் இதுபற்றி எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும். கேகாலை மாவட்டத்தின்…