;
Athirady Tamil News

கொழும்பை சேர்ந்த பெண் உள்ளிட்ட மூவர் தமிழகத்தில் தஞ்சம்!! (படங்கள்)

0

கொழும்பை சேர்ந்த தாய் , மகன் உள்ளிட்ட மூவர் படகு மூலம் தமிழகம் சென்று தஞ்சம் கோரியுள்ளனர்.

கொழும்பை சேர்ந்த ஜெசிந்தா மேரி , அவரது 10 வயதுடைய மகன் மற்றும் மன்னார் சிலாவத்துறையை சேர்ந்த அனிஸ்டன் உள்ளிட்ட மூவரே தஞ்சமடைந்துள்ளனர்.

குறித்த மூவரும் மன்னர் பேசாலை கடற்கரையில் இருந்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு படகொன்றில் சென்று இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை தனுஷ்கோடிக்கு அருகில் உள்ள கோதண்டராமர் கடற்கரை பகுதியை சென்றடைந்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த மண்டபம் கடலோர காவல் படையினர் மூவரையும் மீட்டு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி முதல் இன்றைய தினம் ஜூன் மாதம் 1ஆம் திகதி வரையில் 83 பேர் கடல் மார்க்கமாக தமிழகம் சென்றுள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.