;
Athirady Tamil News

மலைப்பாம்பில் வாழும் ‘ஒட்டுண்ணி புழு’ பெண்ணின் மூளைக்குள் எப்படி வந்தது? (கட்டுரை)

0

உலகில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் ஒரு பெண்ணின் மூளையில் 8 செ.மீ நீளமுள்ள புழு உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு கான்பெராவில் அறுவை சிகிச்சையின் போதுபிரிட்டனில் பிறந்த இந்தப் பெண்ணின் சேதமடைந்த முன் மூளை திசுக்களில் இருந்து “நீண்ட சரம் போன்ற பொருள்” வெளியே இழுக்கப்பட்டது. அது ஒரு புழு.

இந்தச் சிவப்பு நிற ஒட்டுண்ணி இரண்டு மாதங்கள் வரை அந்தப் பெண்ணின் மூளையில் இருந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகிறனர்.

விலங்குகளிடமிருந்து மக்களுக்குப் பரவும் நோய்கள் குறித்த அபாயம் அதிகரித்திருப்பதை இது எடுத்துக் காட்டுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

“அந்தத் தருணத்தில் அறுவைச் சிகிச்சை அரங்கில் இருந்த ஒவ்வொருவரும் வாழ்க்கையில் அதுவரை காணாத வகையில் அதிர்ச்சியடைந்தனர்.

[அந்த அறுவை சிகிச்சை நிபுணர்] அசாதாரணமாகத் தெரிந்த ஒன்றை எடுக்க முயன்றார். படிப்படியாக அது நெளிவது தெரிந்தது. கடைசியில் அது 8 சென்டிமீட்டர் நீளமுள்ள வெளிர் சிவப்பு புழு எனத் தெரிந்தது,” என்று கான்பெரா மருத்துவமனையின் தொற்று நோய் நிபுணர் சஞ்சய சேனாநாயக்க கூறினார்.

இந்தச் சிவப்பு நிற ஒட்டுண்ணி இரண்டு மாதங்கள் வரை அந்தப் பெண்ணின் மூளையில் இருந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகிறனர்.

” இது மனிதர்களில் இதுவரை ஆவணப்படுத்தப்படாத ஒரு புதிய வகை தொற்று.”

ஓபிடாஸ்காரிஸ் ராபர்ட்ஸி புழு ஆஸ்திரேலியாவில் பெரும்பாலான பகுதிகளில் காணப்படும் நஞ்சற்ற கார்பெட் மலைப்பாம்புகளில் பொதுவாக இருக்கக் கூடியது.

அந்தப் பெண் வசித்த இடத்தில் உள்ள ஒரு ஏரிக்கு அருகில் ஒரு வகையான நாட்டுப்புற புல் போன்றவற்றைச் சேகரிக்கும்போது அந்தப் பெண்ணுக்குள் இந்தப் புழு புகுந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக தொற்றுநோய்கள் பற்றிய இதழில் எழுதியுள்ள ஒட்டுண்ணி மருத்துவத்துவ நிபுணரான மெஹ்ராப் ஹொசைன், ”மலைப்பாம்பு மலம் மற்றும் ஒட்டுண்ணி முட்டைகள் போன்றவை இருந்த தீவனச் செடிகளை சமையலுக்குப் பயன்படுத்தியபோது அந்தப் பெண்ணுக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

வயிற்று வலி, இருமல், இரவில் வியர்த்தல், வயிற்றுப்போக்கு போன்ற அசாதாரண அறிகுறிகள் அவருக்குத் தொடங்கின. மறதி அதிகரித்து மன அழுத்தம் மோசமானது. இல்லை இந்தப் புழு மோசமாக்கியது.

ஓபிடாஸ்காரிஸ் ராபர்ட்ஸி புழு மலைப்பாம்புகளில் பொதுவாக இருக்கக் கூடியது.

நோயால் பாதிக்கப்பட்ட பெண் 2021 ஜனவரி பிற்பகுதியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் ஸ்கேன் செய்ததில் “மூளையின் வலது முன் மடலில் ஒரு வித்தியாசமான காயம்” கண்டறியப்பட்டது. ஜூன் 2022இல் அறுவை சிகிச்சை செய்தபோதுதான் அந்தப் பெண்ணின் நோய்க்கான காரணம் தெரிய வந்தது.

மிக மோசமான தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அந்தப் பெண் தற்போது நன்றாக குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

“ஓபிடாஸ்காரிஸ் புழுக்கள் மூளையில் இருப்பது இதற்கு முன் ஒருபோதும் கண்டறியப்பட்டதில்லை,” என்று டாக்டர் ஹொசைன் குறிப்பிட்டுள்ளார்.

“மனிதனுக்குள் மூன்றாம் கட்ட லார்வா அளவுக்கு ஒட்டுண்ணி வளர்ந்திருப்பது மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்று. இதற்கு முந்தைய சோதனை ஆய்வுகள் செம்மறி ஆடுகள், நாய்கள் மற்றும் பூனைகள் போன்ற வளர்ப்பு விலங்குகளில் இந்த அளவுக்கு லார்வா வளர்ச்சி காணப்படவில்லை.”

ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் (ANU) மருத்துவ இணைப் பேராசிரியராகவும் இருக்கும் சேனநாயக்க பிபிசியிடம் பேசும்போது, “இது ஓர் எச்சரிக்கை” என்று கூறினார்.

முக்கால்வாசி தொற்று நோய்கள் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகின்றன.

கடந்த 30 ஆண்டுகளில் 30 புதிய வகை நோய்த்தொற்றுகள் தோன்றியதாக ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழக மருத்துவக்குழு தெரிவிக்கிறது. முக்கால்வாசி தொற்று நோய்கள் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகின்றன.

“இது மக்கள்தொகை பெருகுவதைக் காட்டுகிறது. நாம் விலங்குகளின் வாழ்விடங்களை ஆக்கிரமிக்கிறோம். காட்டு வௌவால்களில் இருந்து வீட்டுப் பன்றிகளுக்கும், பின்னர் மக்களுக்கும் பரவிய நிபா வைரஸ் முதல் கொரோனா வைரஸ், சார்ஸ் அல்லது மெர்ஸ் போன்றவையாக இருந்தாலும் இதையே காண்கிறோம்.”

“கோவிட் தொற்று இப்போது குறைந்து வந்தாலும், தொற்றுநோயியல் நிபுணர்களுக்கும் அரசுகளுக்கும் தொற்று நோய்கள் கண்காணிப்பு தீவிரமாக இருப்பதை உறுதி செய்வது மிகவும் முக்கியம்,” என்கிறார் சேனநாயக்க.

You might also like

Leave A Reply

Your email address will not be published.